தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!!
இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள். இதில் சில கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் தனது தந்தைக்காக பிரசாரம் செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டாவது மகள் பிரியதர்ஷினி, நேற்று அவருடன் பிரச்சாரத்திற்கு சென்று தனது தந்தைக்காக பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டு பேசினார். எங்க அப்பா தினமும் உங்களுக்காதன் உழைக்கிறாரு, காது கேட்காதவர்களுக்கு காது இயந்திரமாக இருப்பாரு, கண்ணு தெரியாதவர்களுக்கு கண் கண்ணாடியாக இருப்பாரு,கஜா புயல்-னா கரண்ட்டா வருவாரு, தீபாவளி அன்று ஆழ்துளைகிணற்றில் சிக்கிய சுஜித் தம்பி உயிரை காப்பாத்த வந்தாரு, காவிரி நீர் தந்தாரு, ஒரு வாய்ப்பு கொடுத்திங்கான காவிரி ஆற்றையே தருவாரு, தீபாவளி, பொங்கல் எங்க கூட கொண்டாடுறத விட உங்க கூட கொண்டாடனும் தான் நினைப்பாரு, அவர எங்க அப்பா-னு சொல்லுறத விட உங்கா வீட்டு பிள்ளை-னு தான் சொல்லணும். உங்க வீட்டு பிள்ளைக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுங்க என்று கோர்வையாக பேசி மாஸ் காட்டி மக்களை கவர்ந்தார் விஜயபாஸ்கரின் மகள் பிரியதர்ஷினி.