Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜயகாந்த் சார் என் கையை விடவில்லை.. வர மனமே இல்லை !! ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!!

Vijayakanth sir did not let go of my hand

Vijayakanth sir did not let go of my hand

விஜயகாந்த் சார் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், ரோபோ சங்கர் அவருடனான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய இழப்பு என்றால் அது விஜயகாந்த் அவர்களின் இறப்பு தான். அவருடைய இறப்பு பலரது மனதில் நீங்கா ரணத்தை ஏற்படுத்திச் சென்றது.

இவர் இவ்வளவு முக்கியமான இடத்தில் இருப்பதற்கு காரணமே அவர்தான். சக மனிதர்களுடன் நடிகர் என்று பாராமல் ஒன்றாக உடன் அமர்ந்து உண்ணுவது, முகம் சுளிக்காமல் உதவி செய்வது, இன்முகத்தோடு உபசரிப்பது ஆகியவை இவரின் இயல்பான குணங்கள். இவர் நடிக்கும் படங்களில், படப்பிடிப்பின் போது அங்குள்ள அனைவரையும் சாப்பிட்டு விட்டீர்களா? எனக் கேட்டுக் கொண்டே இருப்பாராம்!! மேலும் இவரது படங்களில், இவர் பேசும் வசனங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இவரது கடைசி காலங்களில், இவர் செயலற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உடல் நலம் குறித்து பல பிரபலங்களும் இவரை நேரில் சந்தித்து வந்தனர். அவ்வாறு, மூன்று வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் இவரை நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவரது மனைவி பிரேமலதா, உங்களை மாதிரியே ஒருவர் பேசுவாருல, அவர் வந்திருக்காரு உங்கள பார்க்க என்று சொன்னார்கள்.
அதற்கு அவரும் பேச சொல்லுங்கிற மாதிரி கை அசைத்தார். நானும் அவரைப் போலவே பேசி காட்டினேன். அவர் கண்களில் கண்ணீர் ததும்ப, என் கைகளை அவர் நெஞ்சில் வைத்து கட்டி கொண்டார். அந்த நிகழ்வு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. அந்த நிமிடம் அவர் வீட்டை விட்டு வர மனதே இல்லை எனப் பதிவிட்டுள்ளார்.
Exit mobile version