Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க !!

#image_title

ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க
நமக்கு ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்றால் நாம் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை மசாஜ் செய்வதால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது.
தினமும் தூங்கச் செல்லும் முன்பு பாதங்களை மசாஜ் செய்வதால் இரவில் ஆரோக்கியமான மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரும். மேலும் தலைவலி முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை அனைத்தும் குணமடைகின்றது. இந்த பதிவில் பாத மசாஜ் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தூங்கச் செல்லும் முன்பு பாதங்களை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…
* நாம் தூங்கச் செல்வதற்கு முன்னர் நம்முடைய இரண்டு கால்களின் பாதங்களையும் மசாஜ் செய்யும் பொழுது நமக்கு ஆழ்ந்த தூக்கம் வரும்.
* இரவில் தூங்கச் செல்லும் முன்பு நம்முடைய பாதங்களை மசாஜ் செய்வதால் நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* இரவில் தூங்கச் செல்லும் முன்பு கால்களின் பாதங்களை மசாஜ் செய்யும் பொழுது மறுநாள் காலையில் மலம் எளிமையாக வெளியேறுகின்றது.
* நமது கால்களில் உள்ள பாதங்களை மசாஜ் செய்வதால் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
* நாம் பாதங்களுக்கு தினமும் மசாஜ் செய்யும் பொழுது நமக்கு ஏற்படும் பாத வலி குறையும்.
* தினமும் பாதங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் தலைவலி என்ற பிரச்சனை நமக்கு இருக்காது.
* தினமும் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் நம்முடைய பாலியல் வாழ்க்கையை  மேம்படுத்தும்.
பாதங்களை மசாஜ் செய்ய பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்…
நாம் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு பாதங்களை மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். மேலும் எள் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய எண்ணெய்களைக் கூட பாதங்களை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
Exit mobile version