Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகம் இயற்கை முறையில் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

#image_title

முகம் இயற்கை முறையில் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெரிதும் அசைக் கொள்வார்கள்.
இதற்காக கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர்.

ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள்

*கடலை மாவு

*தக்காளி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் 2 தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

பயன்படுத்தும் முறை…

இதை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு காட்டன் துணி கொண்டு முகத்தை துடைத்து விட்டு தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும்.

30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்து வந்தோம் என்றால் முகம் அதிக பொலிவாக காணப்படும்.

Exit mobile version