கூந்தல் பளபளன்னு இருக்க ஆசையா? அப்போ இந்த ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

0
64
#image_title

கூந்தல் பளபளன்னு இருக்க ஆசையா? அப்போ இந்த ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும். ஆனால் ஒருசிலருக்கு தான் இயற்கையாக கூந்தல் அதிக சைனிங்காக இருக்கும். கூந்தல் பளபளன்னு இருக்க வேண்டும் என்றால் தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம். நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

*முட்டை

*தேங்காய் எண்ணெய் –

*எலுமிச்சை சாறு

*தேன்

*தயிர்

செய்முறை:-

ஒரு பவுல் எடுத்து அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றவும். பிறகு அதில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு கலக்கவும்.

அதனை தொடர்ந்து தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றி கொள்ளவும்.

இதை கூந்தல் முழுக்க தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு நன்கு அலசி கொள்ளவும்.

பயன்கள்:-

*முட்டை ஒரு நல்ல ஹேர் கண்டிஷனராக செயல்படும் தன்மை கொண்டது.

*எலுமிச்சை சாறு தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.

*தேன் முடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது.

*தேங்காய் எண்ணெய் தலைமுடியை மென்மையாக மாற்றுவதோடு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்க செய்கிறது.