Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேவையற்ற கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

தேவையற்ற கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

தற்போதுள்ள உணவு முறையின் காரணமாக பெரும்பாலானோருக்கு உடலில் அதிகப்படியான கொழுப்புகள் ஏற்படுகிறது. அதனை எவ்வாறு குறைப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சோம்பு என்பது நம் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

அதன் அடுத்து பட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டையானது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மிளகில் உள்ள காரத்தன்மைகள் நம் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, நான்கு பட்டை, அரை டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை இரண்டு நிமிடம் ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அரை எலுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து தண்ணீரில் நாம் அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்க்க வேண்டும். அதனுடன் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்க வேண்டும்.

இஞ்சி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து எலுமிச்சை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு அதனை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.

 

Exit mobile version