எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

0
554
#image_title

எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

1)விவசாயம் செய்வது போல், விவசாயிகள் உழுவதைப் போல் கனவு வந்தால் சேமிப்பு பெருகும்.

2)வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

3)நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

4)நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.

5)திருமணம் ஆகாதவர் கனவில் பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

6)திருமணம் ஆனவர் கனவில் பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் செல்வம் சேரும்.

7)ஆசான் பாடம் நடத்துவது போன்று கனவு வந்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.

8)கனவில் இறந்தவர்கள் சடலத்தை கண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.

9)கடவுளை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும் என்று அர்த்தம்.

10)தற்கொலை செய்வது போன்று கனவு வந்தால் உங்களை நெருங்கி வந்த ஆபத்து நீங்கி நன்மை பிறக்கும் என்று அர்த்தம்.

11)உங்களுக்கு நெருக்கமானவர்கள் இறப்பது போன்று கனவு வந்தால் அவர்களின் ஆயுள் கூடும் என்று அர்த்தம்.

12)விலங்குகளை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும்.

13)மலத்தை கனவில் கண்டால் பண வரவு அதிகரிக்கும்.

14)மலத்தை மிதிப்பது போன்று கனவு கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.

15)பசு விரட்டுவது போன்று கனவு வந்தால் நோய் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.

16)முத்தமிடுவது போன்று கனவு கண்டால் செல்வாக்கு குறையும் என்று அர்த்தம்.

17)நிர்வாண கோலத்தை கனவில் கண்டால் அவமானம் தேடி வரும் என்று அர்த்தம்.

18)சமையல் செய்வது போன்று கனவு கண்டால் வறுமை பீடிக்கும்.

19)குலதெய்வ கோயிலை கனவில் கண்டால் நினைத்த காரியம் நடைபெறும் என்று அர்த்தம்.

20)குலதெய்வம் கனவில் வந்தால் வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.