விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
142

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது.

இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது.

சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள்.

கட்டைவிரல்:கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஆள்காட்டி விரல்:ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருட்கள் நாசமாகும்.

நடுவிரல்:நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதி இன்மை ஏற்படும்.

மோதிர விரல்:மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.

மோதிர விரல் மற்றும் கட்டைவிரல்:மோதிர விரல் மட்டும் கட்டைவிரலை பயன்படுத்தி விபூதியை பூசினால் உலகம் உங்கள் வசப்பட்டு அனைத்திலும் வெற்றியை மட்டுமே காணலாம்.