காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

0
759

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

நமது உடலில் ஆண் பெண் இருவருக்கும் முடி இருப்பது சகஜமே. ஒரு சில ஆண்களுக்கும் ஒரு சில பெண்களுக்கும் மற்றவர்களைப் மற்றவர்களை விட வித்தியாசமான இடங்களில் ரோமங்கள் இருக்கும். அவ்வாறு இருந்தால் நல்லதா கெட்டதா என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு.

முதலில் முகத்தை விட காது மட்டும் ஒரு சிலருக்கு பெரிதாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு விநாயகர் காது என்று கூறுவர். அவர் விநாயகர் காது உள்ளவர்கள் எவ்வளவு துயரத்தை அனுபவித்தாலும் இறுதியில் வெற்றி அடைவது நிச்சயம். இதனை ஆன்மிக ரீதியாக கூறுகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக ஆண்களில் சிலருக்கு காதில் முடி இருப்பதை காணலாம். அவ்வாறு இருப்பவர்கள் பண்புடையவர்களாக காணப்படுவர். அவர்களது வழியில் எப்பொழுதும் நேர்மை மற்றும் நியாயம் இருக்கும். எந்த வேலை செய்தாலும் குறுக்கு வழியில் செல்லாமல் நீர் வழியிலேயே செல்ல நினைப்பார். யாரேனும் குற்றம் செய்தாலும் அதனை தட்டிக் கேட்க ஒருபோதும் அஞ்ச மாட்டார். அதேபோல இது தரம் குறைந்த வேலை நான் செய்ய மாட்டேன் அது தரம் உயர்ந்த வேலை அதைத்தான் செய்வேன் என்று எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து வேலைகளையும் செய்யும் தன்மை உடையவர்களாக இருப்பர்.

ஒரு சிலருக்கு முகம் வெள்ளையாகவும் அவர்கள் காது கருப்பாகவும் காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் சந்திர யோகம் என்று கூறுவர். இவர்கள் சந்திரனுக்கே இணையானவர்கள் என்றும் கூறுவர். அனைவரையும் கவரும் வகையில் இருந்தது பேச்சு காணப்படும். பிறரின் வருத்தங்களையும் தனது பிரச்சனை போலவே எடுத்துக் கொள்வர். ஆனால் இவர்களது வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி காணப்படும்.

இன்னும் ஒரு சிலருக்கு முகம் கருப்பாகவும் காது வெள்ளையாகவும் இருக்கும். இவ்வாறு இருப்பவர்களை சூரிய அம்சத்தை சேர்ந்தவர்கள் எனக்கொருவர். இவர்களுக்கு அதிக முன் கோபம் வரும். அதேபோல இவர்களை யாரேனும் நம்பி விட்டால் அவரை ஒருபோதும் இவர்கள் கைவிட மாட்டார்கள். அதுமட்டுமின்றி எளிதில் இவர்களால் தோல்வியை தாங்க முடியாது.