கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

0
173
#image_title

இடுக்கியில் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது.

கேரளா மாநிலம் இடுக்கி சக்குபள்ளம் மணக்கால் பகுதியை சேர்ந்தவர் பிஜு (45) அவரின் மனைவி அம்பிலி . பிஜு மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனைவி அம்பிலி கணவர் மீது குமளி போலீசில் புகார் கொடுத்துவிட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற சம்மன்படி தம்பதியினர் சாட்சியம் அளிக்க வந்திருந்தனர்.

வழக்கு தொடர்பாக ஏபிபி அலுவலகத்திற்கு வந்து பேசிவிட்டு விட்டு வெளியே வந்த மனைவி அம்பிலியை கணவர் பிஜூ மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் பிஜூவை பிடித்து காயமடைந்த அம்பிலியை மீட்டு பீருமேடு தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பீருமேடு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுமேஷ் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் குற்றவாளி பிஜூவை கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பீருமேட்டில் நீதிமன்ற வளாகத்தில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவரால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலைவியது.