கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

0
210
Wife floating in a flood of blood in front of her husband! The disturbing CCTV footage!

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இசாக் அவருடைய மனைவி ரபியதுல் பகிரியா. இவர் இருவரும் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரபியதுல் பகிரியா மற்றும் அவரது கணவர் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அதில் ரபியதுல் பகிரியா பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மேலும் முகமது இசாக் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

இந்த சம்பம் குறித்து வடக்கு போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் முத்துமாணிக்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த அரசு பேருந்தை வடக்கு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.