Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு தீக்காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த அந்த தெரு நாயை தொலைக்காட்சி நடிகர் ஜெயா பட்டாச்சாரியா அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அவருடைய தொண்டு நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதையடுத்து தெரு நாய் மீது ஆசிட் வீசிய பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக மும்பை காவல் துறையினர் கூறினர். பூனைகளுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கும் பொழுது தெரு நாய் வந்ததால் ஆசிட் விசினேன் என்று அந்த பெண் கூறினார்.

Exit mobile version