இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு!
பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுமை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் இரு மகன்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இப்போது இந்த சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படாததால் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க மறுக்கும் வகையில் எந்த மரமும், நடைமுறையும் நிரூபிக்கப்படாததால் இந்த வாரிசுரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து சொத்தில் அவர்களுக்கும் பங்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பழங்குடியின பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு வழங்குவதற்கான நடைமுறைகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.