தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இந்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால், எப்பொழுது வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதனால், மாநில அரசும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே தர ஏற்பாடு செய்து வந்துள்ளது.
ஏனென்றால், இந்த வருட பொங்கல் தொகுப்பில் நிதி நெருக்கடி காரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சிகள் அதிருப்தி அளித்து வந்தனர். இந்நிலையில், மகளிர் உரிமை தொகை முன் கூட்டியே கிடைத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மாநில அரசு மகளிர் உரிமைத் தொகையை இந்த மாதம் இன்று(ஜனவரி 9) மற்றும் நாளை(ஜனவரி 10) ஆகிய நாட்களில் வரவு வைக்க திட்டமிட்டது. அதன் விளைவாக இன்று உரிமை தொகையானது பலரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாளையும் மீதமுள்ள நபர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகளிர் மிகுந்த மகிழ்ச்சியில், இச்செய்தியை ஷேர் செய்து வருகின்றனர்.