Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு!! ஆண் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?!! போலீஸ் வழக்குப்பதிவு!!

பிக்பாஸ் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு!! ஆண் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?!! போலீஸ் வழக்குப்பதிவு!!

யாசிகா ஆனந்த் கோலிவுட் சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை ஆவார். மேலும், இவர் ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில், அவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து இரவு ஈசிஆர் சாலையில் அதிவேகமாக காரை யாஷிகா இயக்கியுள்ளார். இரவு 11:45 மணி அளவில் சூலேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள பேரிக்கேடில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனை தொடர்ந்து கார் பலத்த சேதமடைந்தது. அத்துடன் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரை ஓட்டி வந்த யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்இருக்கையில் அமர்ந்து இருந்த ஆண்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

பவானி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாஷிகா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா சுயநினைவோடு இருப்பதாக நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மோசமாக கார் ஓட்டி உயிர் இழப்பை ஏற்படுத்திய காரணத்திற்காக போலீசார் அவர் மீது அதிவேகமாக கார் ஓட்டியது, விபத்துக்கு உள்ளாகியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா? இல்லையா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version