Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“மஞ்சள் + பட்டை” போதும் சர்க்கரை நோயை உண்டு இல்லாமல் செய்து விடலாம்!

#image_title

“மஞ்சள் + பட்டை” போதும் சர்க்கரை நோயை உண்டு இல்லாமல் செய்து விடலாம்!

உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோய் ஏற்பட்டவரை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் உணவில் அதிக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மருந்து மாத்திரை இன்றி கட்டுக்குள் வைக்கும் வழி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)பட்டை
3)மஞ்சள்
4)பாதாம் பருப்பு
5)நாவல் பொடி

செய்முறை:-

நாவல் விதை 1/4 கப் அளவு எடுத்து உலர்த்தி அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதன் பின்னர் 1/4 கப் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் 1 துண்டு பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து வைக்கவும். அரைத்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் சேர்க்கவும். பிறகு அரைத்த பொடி 2 தேக்கரண்டி மற்றும் மஞ்சள் சிட்டிகை அளவு சேர்த்து கொத்திக்க விட்டு குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

Exit mobile version