உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?
ஆமாம் என்றால்
நீங்கள் ஏதாவது ஒரு பௌர்ணமி அன்று கண்டிப்பாக திருமீயச்சூர் சென்று அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும்.
இது மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமீயச்சூர் அமைந்துள்ளது.
இங்கே இஞ்சிமேடு என்ற ஊருக்கு முதலில் செல்ல வேண்டும்.
அங்கே உள்ள சிவாலயத்தில் இருக்கும் வராகித் தாயை முதலில் வழிபட வேண்டும்!!!
அதன் பிறகு அம்பர் மாகாளம் என்ற ஊருக்கு செல்ல வேண்டும்.
அங்கே உள்ள சிவாலயத்தில் ராஜ சியாமளா அன்னையை வழிபட வேண்டும் !!!
அதன் பிறகு தான் பேரளம் அருகில் உள்ள திருமீயச்சூருக்கு வரவேண்டும்.
அவ்வாறு வந்து இங்கே இருந்து பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் அன்னை லலிதாம்பிகையை சரணடைய வேண்டும் .
அன்னை லலிதாம்பிகையின் முதல் மந்திரி வராகி !!!இரண்டாவது மந்திரி ராஜ சியாமளா !!!
இந்த இரண்டு தாயார்களின் தரிசனத்தை பெற்ற பிறகு
தலைமை தாய்
ஸ்ரீ சக்கரத்தின் தலைமை அன்னை
நம் அனைவருக்கும் உடலுக்குள் இயங்கும் சக்தியாக சக்தி சொரூபமாக இருக்கும்
லலிதாம்பிகையை வழிபட வேண்டும்.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் தினமும் பாராயணம் செய்யப்பட்டு வரும் லலிதா சகஸ்ரநாமம் பிறந்த ஊர் இதுதான்!!!
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் குறுக்காக வரும் பாதை தான்
கும்பகோணம் -காரைக்கால் செல்லும் பாதை
இந்த சாலைகள் இணையும் இடத்தில் அமைந்திருக்கும் ஊர் தான் பேரளம் ஆகும் .
இந்த பேரளம் ஊரிலிருந்து மேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ஊர் தான் திருமீயச்சூர் ஆகும்.
முதல் யுகமான கிருதயுகம் காலத்தில் ஒருவர் ஜாதகத்தில் 5 கிரகங்கள் மட்டுமே இயங்கி வந்தன.
இரண்டாம் விதமான திரோதா யுகத்தில் ஏழு கிரகங்களாக ஒருவர் ஜாதகத்தில் அதிகரித்தன!
இந்த யுகத்தின் முடிவில் தான் ராமாயணம் நடைபெற்றது .
மூன்றாம் யுகமான துவாபர யுகத்தின் முடிவில் ஒருவர் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் இயங்க ஆரம்பித்தன.
ஆனால் நவகிரகங்களை மனிதர்கள் வழிபட ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பாகவே உண்டான கோவில்தான் இந்த திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் !!!
இந்த கோவிலின் முழு பெயர் அருள்மிகு லலிதாம்பிகை உடனுறை மேகநாதன் திருக்கோயில்!!!
இங்கே நவகிரக லிங்கங்கள் என்று 12 நாகங்கள் செதுக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.
இதை வாசிக்கும் நீங்கள் தினமும் வராஹிமலை ஜபித்துக் கொண்டிருந்தாலும் சரி
அல்லது
காளி அவதாரங்களில் ஏதாவது ஒரு அவதாரத்தை உபாசனை செய்து கொண்டு இருந்தாலும் சரி
அல்லது
ராஜ சியாமளா என்ற மதுரை மீனாட்சி தாயை இஷ்ட தெய்வமாக தினமும் வழிபட்டுக் கொண்டிருந்தாலும் சரி
அல்லது
திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தாயை உங்களுடைய அன்னையாக ஏற்றுக் கொண்டு தினமும் அந்த அன்னையை நினைத்துக் கொண்டு இருந்தாலும் சரி
அல்லது
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரபலமான பவானி தாயை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் சரி
அல்லது
மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் பவதாரணி என்ற தட்சினேஸ்வரம் காளியை வழிபட்டுக் கொண்டு இருந்தாலும் சரி
அல்லது
காஞ்சி காமாட்சி தாயை உங்களுடைய உபாசனை தெய்வமாக எடுத்துக் கொண்டிருந்தாலும் சரி
அல்லது
கன்னியாகுமரி அம்மனை தினமும் வழிபட்டு கொண்டு இருப்பவராக இருந்தாலும் சரி
அல்லது
பத்திரகாளியை உங்களுடைய இஷ்ட தெய்வமாக எடுத்துக்கொண்டு அந்த தாயிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி
அல்லது
அங்காள பரமேஸ்வரியை உங்கள் தாயாக நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தாலும் சரி
அல்லது
செல்லியம்மனை உங்கள் தாயாக நினைத்து உபார்த்தனை செய்து கொண்டிருந்தாலும் சரி
அல்லது
கொல்லிமலையில் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கொல்லிப் பாவை அன்னையை நினைத்துக் கொண்டு வழிபட்டு கொண்டு இருப்பவராக இருந்தாலும் சரி
உங்களுடைய வாழ்நாளில் உங்கள் வழிபாடு முழுமை அடைவதற்கு ஒரு முறை திருமீயச்சூர் வரவேண்டும்.
இங்கே வந்து லலிதாம்பிகை உடனுறை மேகநாதர் சுவாமியை வழிபட வேண்டும் .
எந்த நாளாக இருந்தாலும் அவ்வாறு வந்து வழிபடலாம்
பௌர்ணமி நாள் அல்லது உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தன்று முதன் முதலில் வருகை தருவது மிகவும் நன்று!!!
அன்னை லலிதாம்பிகை சன்னதியை நீங்கள் 64 முறை வலம் வர வேண்டும்.
ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் உங்களுக்கு பிடித்தமான அன்னையின் பெயரை நினைத்து ஜெபம் செய்து கொண்டு வலம் வருவது அவசியமாகும்.
“மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே”