தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

0
112
Youth attacked by alcohol in Tuticorin district! Death threat police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவருடைய மகன் ராகவேந்திரா (28) இவர் தாளமுத்து நகர் விவேகானந்தர் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்தனர்.

மேலும் முதலில் வாய் தகரகராக ஆரம்பித்த இந்த சண்டையானது பிறகு கைகலப்பாக மாறியது. மேலும்  ராகவேந்திராவை மதுபாட்டினால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியா வழக்கு பதிவு செய்து வந்த நிலையில்  செல்வகுமார் என்பவரை கைது செய்தானர்.மேலும்  இவ்வளக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கொலை மிரட்டல் எதற்காக என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .