Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

#image_title

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் தற்போது நடைபெற்ற கோல்ப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

சீனாவின் ஹாங்சோவ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கோல்ப் விளையாட்டில் தனிநபர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அதிதி அசோக் களமிறங்கினார். 7 ஸ்ட்ரோக் முன்னிலையில் இன்றைய நாளை இந்திய வீராங்கனை அதிதி அசோக் தொடங்கினார்.

7 ஸ்ட்ரோக் முன்னிலையில் அதிதி அசோக் இன்றைய நாளை தொடங்கினாலும் தாய்லாந்தை சேர்ந்த வீராங்கனை அர்பிசயா யூபோல் அவர்கள் தங்க பதக்கத்தை வென்றார். இதையடுத்து இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அதிதி அசோக் அவர்கள் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார்.

Exit mobile version