Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரீபியன் லீக் : 4 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணியும், நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது.  டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 4 ஓவருக்கு 29 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

Exit mobile version