Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அணி கிரிக்கெட் வீரார்களுக்கு மத்திய அரசு தளர்வு! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

ஊரடங்கு அறிவித்த போதும் இந்திய கிரிக்கெட் வீரருக்கான பயிற்சி முகாம் துவங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது இதனால் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சிகளில் பங்கேற்கவில்லை.

13வது ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர் இதனிடையே நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன இதன்படி ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் நடத்துவது தொடர்பாக அனுமதி தரப்பட்டது.

இதனால் இந்திய வீரர்கள் பயிற்சி முகாம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது பயிற்சிக்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்ட் பிசிசிஐ பொருளாளர் கூறியது மே 31-ஆம் தேதி வரை விமான போக்குவரத்து மற்றும் மக்கள் நடப்பதற்கான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணியின் வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் நடத்துவது பிசிசிஐ அவசரம் காட்டவில்லை காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்பாடு செய்ய உள்ளது. இதற்கு தேவையான உதவிகளையும் தயாரித்து வருகிறோம் தற்போதுள்ள சூழலில் நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் இந்திய அணிக்கு நல்ல திட்டத்தை தயாரிக்க பிசிசிஐ முயற்சித்து வருகிறது. ஏனெனில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் வீரர்கள் பயிற்சியாளர்கள் பணியாளர்கள் பாதுகாப்புகளுக்கு எந்தவித குறைபாடுகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே சற்று காத்திருப்போம் இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படாமல் உறுதுணையாய் இருப்போம் என கூறினார்.

Exit mobile version