Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிரிக்கெட் விளையாடலாம் ஆனால் இதற்கு மட்டும் தடை! ஐசிசி அறிவிப்பு!

ஊரடங்கு அறிவித்த போதும் இந்திய கிரிக்கெட் வீரருக்கான பயிற்சி முகாம் துவங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி எந்தவித பயிற்சிகளில் கூட பங்கேற்கவில்லை 13வது ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர் இதனிடையே நான்காவது கட்ட ஒரு அரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன இதன்படி ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் நடத்துவது தொடர்பாக தளர்வுகள் தரப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்பொழுது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின் போது பந்து பளபளப்பாக்க பந்துகளில் பந்துவீச்சாளர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் எச்சில் பயன்படுத்தினால் மற்றவர்களுக்கு அதன் மூலம் வைரஸ் பரவும் என்ற அபாயம் உள்ளதால் பயன்படுத்த ஐசிசி தடை விதிக்க பரிந்துரை செய்து உள்ளது.

எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் அது பந்துவீச்சாளர்களுக்கு கடினம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் எச்சில் பயன்படுத்த தடை விதிப்பது பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம் ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர ஆலோசனை செய்யலாம். மேலும் பளபளக்க முடியவில்லை என்றால் பந்திற்கும் பேட்டிற்கும் போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. பந்து வீச்சாளர்களுக்கு முகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். நீங்கள் இதை பயன்படுத்த அனுமதிக்க வில்லை என்றால் மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் இதுவும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இல்லையெனில் கிரிக்கெட் பார்ப்பது சுவாரசியமாக இருக்காது என கூறியுள்ளார்.

Exit mobile version