Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 8 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

#image_title

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 8 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த நிலையில் இன்னும் 8 மணி நேரத்தில் அவை புயலாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இவை வங்கக்கடல் பகுதிகளில் நாளை வரை நிலைகொண்டிருக்கும் என்றும் அதன் பின் வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் கரையைக் கடக்க கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தினால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தலைநகர் சென்னையை பொருத்த வரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Exit mobile version