இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டார். டோனி கடந்த 2004 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். மேலும் இலங்கைக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக தனது கணக்கை தொடக்கி வைத்தார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய டோனி கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதே போல் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டி கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
சுதந்திர தின தினத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி
