ஆபத்து நேரத்தில் ஒருவனால் எப்படி விளையாட முடியும்?

0
99
சுரேஷ் ரெய்னா தற்போது முதல் முறையாக  ரெய்னா மவுனம் கலைத்துள்ளார்.தான் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார். உயிருக்கு ஆபத்து எனும் போது   எப்படி ஒருவரால் விளையாட முடியும். எனக்கு இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு குடும்பம் உள்ளது – மற்றும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை குடும்பத்திற்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது.
டோனியுடனான பிளவு பற்றிய செய்திகளை மறுத்த ரெய்னா மஹிபாய் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என கூறினார்.
துபாயில் உள்ள கொரோனா வைரஸ் நிலைமையைப் பொறுத்து போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் ரெய்னா நிராகரிக்கவில்லை. நான் என்றென்றும் ஒரு சிஎஸ்கே வீரர். துபாயில் நிலைமை சிறப்பாக வந்தால், நான் கூட திரும்பி வரலாம். கதவு எனக்கு மூடப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன் என்று  கூறினார்.