இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!!
திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் வழங்குவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் அண்ணா பிறந்தநாள் அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், குறிப்பாக இது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.
இதனை பெறுவதற்கு தற்பொழுது பலரும் விண்ணப்பம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கு தனி ரேஷன் கார்டு என்றும் அவர்களது அப்பா அம்மாவிற்கு தனி ரேஷன் கார்டு என்றும் பிரித்து விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வருகின்றனர்.இருப்பினும் இந்த ஆயிரம் ரூபாய் மானியத்தை பெற தற்பொழுது இவ்வாறு தனித்தனியே அப்ளை செய்து வருகின்றனர்.இதனால் ரேஷன் கார்டு விண்ணப்ப பதிவானது அதிகரித்துள்ளது.ஒரே கூட்டு குடும்பத்தில் இருந்து கொண்டு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தால் அதனை ரத்து செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரே குடும்பத்தில் இருந்து கொண்டு தனியாக நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வதற்கென்று புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
அந்த வகையில் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களின் பெயரில் தனியாக சிலிண்டர் இருக்க வேண்டும். அதேபோல இவர்களுக்கு என்று தனி வீடு சமையலறையும் இருப்பது கட்டாயம்.மேலும் திருமண பத்திரிக்கையையும் விண்ணப்பத்துடன் சேர்த்து அப்ளை செய்யும்படி கூறியுள்ளனர். அதேபோல இவர்கள் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக அவர்களது தாய் தந்தையரின் கார்டில் இருக்கும் பெயரை கட்டாயம் நீக்கம் செய்வது அவசியம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ள இந்த விதிமுறைகள் அனைத்தும் முறையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டும் தான் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்றும், இதில் ஏதேனும் குளறுபடி இருந்தால் அவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இதை சோதனை செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல இந்த புதிய ரேஷன்கார்டு பெறுவதற்கு சிலிண்டர் இணைப்பு வேண்டும் என விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.