2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர்!!! இதற்கான வீரர்கள் ஏலம் எங்கு, எப்பொழுது என்று தெரியுமா!!?

0
152
#image_title

2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர்!!! இதற்கான வீரர்கள் ஏலம் எங்கு, எப்பொழுது என்று தெரியுமா!!?

2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எங்கு, எப்பொழுது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கட் தொடரில் சென்னை, மும்பை, குஜராத், கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் வென்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கரண் 18.50 குடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் சாம் கரண் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஏலம் துபாயில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.