இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!!
இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது சில மோசடி கும்பல்கள் வாடிகையலர்களுக்கு இலவசமாக கிரெடிட் கார்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கொள்ளையடித்து வருவதாக தகவல் வருகின்றது.
எனவே அந்த மோசடி கும்பல்கள் உங்களுக்கு இலவச கிரெடிட் கார்டுகள் வாங்கி தருவதாக சில மெசேஜ்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றது. இதில் வரும் லிங்கை அவர்கள் தொட்டு வேண்டிய தகவல்களை எல்லாம் பதிவு செய்வதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி கும்பல் கொள்ளையடித்து விடுகின்றனர்.
இதனால் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது. எனவே எஸ்பிஐ இலவச கிரெடிட் கார்டு வாங்கி தருவதாக வாடிக்கையாளர்களுக்கு வரும் லிங்கை தொட்ட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
வங்கி தொடர்பான பல மோசடிகள் நடந்து வருகின்ற நிலையில் தற்பொழுது லிங்க் அனுப்பி பாஸ்வேர்டை திருடி அதன் மூலம் வங்கி கணக்கில் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை மெசேஜை அனுப்பி வருகின்றது.