Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எனக்கு தனிப்பட்ட சாதனைகள் முக்கியமில்லை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டிகளில் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்த டுவைன் பிராவோ பேசும்போது எந்த ஒரு தொடரில் விளையாடினாலும் விக்கெட் எடுப்பதை தவிர கோப்பையை வெல்லும் போதே மிகவும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைகிறேன். என்னை பொறுத்தவரை இது போன்ற தனிப்பட்ட சாதனைகளை விட கோப்பையை வெல்வதே எனது நோக்கமாகும் என்று கூறினார்.

Exit mobile version