பொய் என்றால் திமுக! கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி!

Photo of author

By Parthipan K

பொய் என்றால் திமுக! கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி!

Parthipan K

Updated on:

திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து விட்டனர் என முதல்வர் கூறியுள்ளார். அவர் கூறியது
கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவர்கள் அளித்த கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகைகடன் ரத்து, மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. இது நிறைவேற்ற முடியுமா? இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

சட்ட சபை கூட்டத்தொடர் முடிந்து அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்றிரவு கோவை சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் குறித்த கேள்வி எழுப்பிய செய்தியாளர், மக்களை பாதுகாக்க எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதனை அரசு ஆதரிக்கும் எனக் கூறிய முதலமைச்சர் . இது மக்களுக்கான ஆட்சி மக்கள் விரும்பாத எதையும் இந்த ஆட்சி செய்யாது எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசியதாவது, கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார். பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. நாங்கள் அப்படி எந்த பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இந்த அரசு அளிக்கும் என்று கூறினார்.

மேலும் மாணவி ஒருவர் குத்து சண்டை போட்டியில் அனுமதிக்க படாததால் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து மாணவியின் பெற்றோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். அதாவது குத்து சண்டையில் இடம் தரமறுத்த கல்லூரி நிர்வாகத்தின் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இது மக்களுக்கான ஆட்சி எனவும் இது மக்கள் விரும்பாத எதையும் செய்யாது எனவும் தெரிவித்தார். திமுக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. அந்த வாக்குறிதகள் என்றுமே நிறைவேற்ற முடியாது என அவர் கடுமையாக குற்றம் சாட்டினர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.