Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மெஸ்சியின் தகவலால் அதிர்ச்சி அடைந்த பார்சிலோனா அணி

இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும், பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார். மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ பார்சிலோனா நிர்ணயிக்கும் எனத் தெரிகிறது.
Exit mobile version