Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

#image_title

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது.

வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் உணவுகளை உட்கொள்வதால் வாந்தி ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் சில சமயங்களில் அஜீரணக் கோளாறு காரணமாகவும் வாந்தி ஏற்படுகிறது. எளிதில் செரிமானம் ஆகாத பொருட்களை உண்பதால் குமட்டல் வாந்தி ஏற்படுகிறது. வயிற்று அலர்ஜி மற்றும் இரைப்பை புண் போன்ற காரணங்களாலும் வாந்தி அதிக அளவில் ஏற்படுகிறது.

வாந்தி அறிகுறிகள்

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, வறண்ட வாய், தலை சுற்றுதல், அதிக வியர்வை, மன குழப்பம், உடல் சோர்வு, தூக்கமின்மை, பதட்டம் , குழப்பம் போன்றவைகள் வாந்தியின் அறிகுறிகளாகும்.

வாந்தி வராமல் தடுக்க

அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் இருப்பது. கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். வாந்தி எடுப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது.  இதற்கு ஓ ஆர் எஸ் என்ற உப்பு  சர்க்கரை கரைசலை  சிறிது எடுத்துக் கொண்டால் வாந்தியை தடுக்கலாம்.

மேலும் சில சமயங்களில் ஆல்கஹால் உட்கொள்வதாலும் வாந்தியின்மை ஏற்படுகிறது.

இதற்கு வாந்திக்கு ஒரு அருமையான மருந்து இஞ்சி என்று ஆய்வு கூறப்படுகிறது. இஞ்சியை எடுத்துக் கொள்வதால் வாந்தி வருவதை தடுக்கலாம். மேலும் பயணத்தின் போது வாந்தி வருபவருக்கு இஞ்சி ஓர் நல்ல மருந்தாக அமைகிறது.

Exit mobile version