என்னுடைய கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும்

0
83
ஆஸ்திரேலியாவிற்கு நீண்ட நாள் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் உள்ளார். இவர் சிறந்த தொடக்க வீரர் 33 வயதான இவர் நீண்ட காலமாக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது எனக்கு இந்தியாவில் நடக்கும் போட்டிதான் கடைசி போட்டி மேலும் அந்த 2023-ல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலக கோப்பையின் இறுதிப் போட்டிதான் என்று கூறினார். அந்த போட்டியை வெல்வதுதான் என்னுடைய இலக்கு அது நீண்ட காலம்தான். இருந்தாலும், என்னால் அந்த காலத்தை உறுதி செய்யமுடியும். அப்போது எனக்கு 36 வயதாகும். ஃபார்ம், காயம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும்  என்றார்.