Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் மனதளவில் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தன் மீதான எதிர்பார்ப்புகள், பணிச்சுமை மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தனது சமீபத்திய போராட்டத்தைப் பற்றித் மனம் திறந்து பேசியுள்ளார். தொடர்ந்து விளையாடுவதற்கான தனது உறுதியுடன் “சமீபகாலமாக கொஞ்சம் போலியான தீவிரமாக இருப்பது போல நடந்துகொண்டுள்ளேன்” என்பதை உணர்ந்தேன் என்று கூறினார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆசியக் கோப்பை ஆட்டம் ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்ததைத் தொடர்ந்து 42 நாள் இடைவெளிக்குப் பிறகு கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதைக் குறிக்கிறது. இதில் “கடந்த 10 வருடங்களில் நான் ஒரு மாதமாக பேட்டை தொடாமல் இருந்தது இப்போதுதான்.” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் “நான் அதைப் பற்றி யோசித்தபோது. சமீபகாலமாக என் தீவிரத்தை கொஞ்சம் போலியாக செய்கிறேன் என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ‘இல்லை, என்னால் அதைச் செய்ய முடியும்’… போட்டித்தன்மையுடன் இருப்பது மற்றும் உங்களுக்கு தீவிரம் இருப்பதாக உங்களை நீங்களே நம்பிக் கொள்வது, ஆனால் உங்கள் உடல் உங்களை நிறுத்தச் சொல்கிறது. சற்று ஓய்வு எடுத்துவிட்டு பின்வாங்குங்கள் என்று மனம் சொல்கிறது… நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள், உங்களுக்காக கடினமாக உழைக்கிறீர்கள் என்று சொல்லி அதை மனதளவில் நன்றாக இருப்பதால் நன்றாக இருப்பீர்கள்.” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version