Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ

உலகம் முழுவதும் கொரோனவால் பல்வேறு துறைகள் பாதிக்கபட்டுள்ளன அந்த வகையில் அனைத்து விதமான போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடைபெறவில்லை. தற்போது இங்கலாந்தில் மட்டுமே ரசிகர்களின்றி போட்டி நடைபெறுகிறது. கடந்த மே மாதமே இந்தியாவில்  நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி கொரோனவால் ஒத்திவைக்கபட்ட நிலையில் தற்போது துபாயில் போட்டி நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்த போட்டியின் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்திய – சீனா எல்லை பிரச்சனையால் மீண்டும் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக தொடருமா என பல கேள்விகள் எழுந்தன. இந்த போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து விவோ நிறுவனம் விலகியுள்ளது இதனால் பிசிசிஐக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.
Exit mobile version