Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனைத்து போட்டிகளிலும் நாங்கள்தான் வெல்வோம்

ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் கடந்த 2008 முதல் நடந்து வருகிறது. இத்தனை வருட காலத்தில் எந்த அணியும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை வெல்வோம் என்று கூறியுள்ளார். எங்கள் அணி அதற்காக கடுமையாக உழைக்கும் என்று கூறினார். ஐ.பி.எல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நுழையாத ஒரே அணி டெல்லி ஆகும். இந்த சீசனிலாவது அந்த அணி அதை மாற்றிக்காட்டுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version