Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

#image_title

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் நடைப்பெறவிருக்கிறது.அதில் இந்திய அணியும்,ஒரு அணியாக விளையாடவுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் ரோகித் ஷர்மா,விராட் கோலி,ஹர்திக் பாண்டியா,சுப்மன் கில், , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.அஷ்வின், போன்ற 15 வீரர்கள் இந்தியாவிற்காக களமிறங்கவுள்ளனர்.

இந்த உலகக்கோப்பையை இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.அந்த வகையில் முன்னாள் உலகக்கோப்பை வீரரான யுவராஜ் சிங் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில்,பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகும் வீரர்கள் இவர்கள் தான், என 3 வீரர்களை கூறியுள்ளார்.

வழக்கம் போல் அனைவரும்கூறும், விராட் கோலி, ரோகித் ஷர்மா, சுப்மன் கில்,போன்ற வீரர்களை தான் குறிப்பிடுவார் என்று நினைத்தால், அவர் சொன்ன பதிலே வேறு

யுவராஜ் சிங் கூறிய அந்த மூன்று வீரர்கள், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், ஆகியோர் ஆவர். இவர் குறிப்பிட மூவருமே பவுலர்கள் என்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

பும்ரா,மற்றும் முகமது சிராஜ் சிறப்பான பவுலிங்கை, அணிக்கு செலுத்தி வருகின்றார்கள்.ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர்,அவர் பேட்டிங்,பீல்டிங்,பவுலிங் என அனைத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர். எனவே இந்த மூன்று வீரர்கள் தான், இந்திய அணியின் கேம் செஞ்சராக திகழ்வார்கள் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.இவரது இந்த பதிவானது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவுள்ளது.

Exit mobile version