Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க லண்டன் பயணம்!!

#image_title

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க லண்டன் பயணம்!
அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று லண்டன் செல்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி தொடங்கி ஜூன் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றது. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கும் தயாராகும் விதமாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் புஜாரா ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி டெஸ்ட் கிரிக்கெட் தோடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதையடுத்து உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இன்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் விராட் கோலி, முகமது சிராஜ், ரவி அஷ்வின், அக்சர் பட்டேல், சர்தல் தக்கூர், ஜெயதேவ் உனாட்கட், உமேஷ் யாதவ் ஆகியோர் இன்று லண்டன் செல்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுகளில் விளையாடி வரும் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எஸ் பரத், இஷான் கிஷன், ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அஜின்கியா ரஹானே, முகமது ஷமி, சுப்மான் கில் சூரியக்குமார் யாதவ் ஆகியோர் மே 29ம் தேதி அதாவது பிளே ஆப் சுற்றுகள் முடிந்த பிறகு லண்டன் செல்வவுள்ளனர்.
Exit mobile version