அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்! பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பேட்டி!!

0
63

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்! பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பேட்டி!!

 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்ன்ள் வேகபந்து வீச்சாளர் முகம்மது அமீர் தெரிவித்துள்ளார்.

 

இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகம்மது அமீர் 2009ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தொடங்கினார். பந்துவீச்சாளர் முகம்மது அமீர் 2009ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியதன் மூலமாக  பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார். முகம்மது அமீர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச அணியில் இடம் பிடித்தார். மேலும் ஒரு நாள் போட்டியிலும்  அதே 2009ம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

 

பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒருநாள் போட்டிகளிலும், 50 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2009 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியிலும் 2017ம் ஆண்டு சேம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியிலும் முகம்மது அமீர் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது அமீர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச போட்டிகளில் இருந்து 2020ம் ஆண்டு ஓர்வு பெற்ற முகம்மது அமீர் அவர்கள் தற்பொழுது வரை இங்கிலாந்தில் குடியேறி வசித்து வருகிறார். இந்நிலையில் முகம்மது அமீர் அவர்கள் அடுத்த ஆண்டு பிரிட்டன் பாஸ்போர்ட் பெறவுள்ளதாகவும் பிரிட்டன் பாஸ்போர்ட் பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.