டிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Photo of author

By Hasini

டிகிரி முடித்துள்ளீர்களா? நீதி மன்றத்தில் 30000 சம்பளத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள க்ளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 37 கிளார்க்பணியிடங்கள் உள்ளன. 2019 – 2020 மற்றும் 2020 – 2021 ம் கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பது மிக அவசியம். 10 + 2 + 3 பிளஸ் 3 அல்லது 10+ 2 + 5 என்ற ரீதியில் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

01.09.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் 30000 சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 13. 9. 2021 தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அல்லது லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf