தெறி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்காரா!!! ஜவான் புரோமோசனில் யோகி பாபு கூறியது என்ன!!?

Photo of author

By Sakthi

தெறி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்காரா!!! ஜவான் புரோமோசனில் யோகி பாபு கூறியது என்ன!!?

Sakthi

Updated on:

 

தெறி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்காரா!!! ஜவான் புரோமோசனில் யோகி பாபு கூறியது என்ன!!?

 

தெறி திரைப்படத்தில் நானும் நடித்திருந்தேன் என்றும் ஆனால் அந்த காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டதாகவும் நடிகர் யோகி பாபு அவர்கள் ஜவான் திரைப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

 

இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் தெறி திரைப்படம் உருவாகி வெளியானது. எதிர்பார்த்ததை விட வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற தெறி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

தெறி திரைப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், மகேந்திரன், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் தெறி திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்நிலையில் தானூம் தெறி படத்தில் நடித்திருந்ததாக நடிகர் யோகிபாபு அவர்கள் ஜவான் திரைப்பட புரோமோசன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

 

ஜவான் திரைப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் யோகி பாபு அவர்கள் “நான் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் படத்தின் நீளம் காரணமாக என்னுடைய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது” என்று கூறினார்.

 

தெறி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு அவர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதை அடுத்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிகர் யோகி பாபு அவர்களை நடிக்க வைப்பேன் என்று இயக்குநர் அட்லி கூறியிருந்தார். அதைப் போலவே இயக்குநர் அட்லி இயக்கிய மெர்சல், பிகில் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிகர் யோகி பாபு அவர்களை நடிக்க வைத்தார்.

 

தற்பொழுது நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்திலும் நடிகர் யோகி பாபு அவர்கள் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.