பெண்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் சுதந்திரமாக இருக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அதிலும் பெண்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் பல்வேறு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் மூலம் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் தோறும் தங்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது
இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படுகின்றது. இது போலவே கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்தில் தொகை மட்டுமே வேறுபடுகின்றது.
மத்திய பிரதேசத்தில் லாட்லி பெஹ்னா யோஜனா என்ற பெண்களுக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகை வழங்க்கபடுகின்றது. மத்திய பிரதேச பெண்களுக்கு மாதந்தோறும் 1250 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதியே இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மத்திய பிரதேச அரசின் சங்கரா அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் சங்கரா தனிநபர் அட்டை ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மொபைல் எண் ஆகியவை இத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற குடும்ப வருமானம் 2.5 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.
இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பெண்களுக்கு பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக உதவித்தொகை வழங்க மாநிலம் முடிவு எடுத்துள்ளது.. அதன் பேரில் வரும் ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறக்கூடிய பெண்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கொடுக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இருந்து 1500 ரூபாய் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது