2 கிலோ தங்கம் 58 கிலோ வெள்ளியெல்லாம் பத்தாது:! வரதட்சனை கொடுமை படுத்திய கணவன் வீட்டார்! போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்!

0
77

2 கிலோ தங்கம் 56 கிலோ வெள்ளியெல்லாம் பத்தாது:! வரதட்சனை கொடுமை படுத்திய கணவன் வீட்டார்! போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்!

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னபூரணி.இவர் பெரிய தொழிலதிபர் ஆவர்.கடந்த 2018 ஆம் ஆண்டு,கோவையை சேர்ந்த ராசி கற்கள் விற்கும் தம்பதிகளான ஸ்ரீகாந்த் கல்பனா ஆகியோரின் மகனான ரித்தீஷ்க்கும் அன்னபூரணி-க்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின் பொழுது அன்னபூரணி வீட்டார் 2 கிலோ தங்க நகை 58 கிலோ வெள்ளி பொருட்கள்,66 கேரட் வைர நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பொருட்கள், ஆடை ஆபரணங்கள் என அனைத்து பொருட்களும் வரதட்சணையாக அன்னபூரணி குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.

இருந்த பொழுதிலும்,இந்த வரதட்சணை எல்லாம் பத்தாது என்று ரித்தீஷின் குடும்பத்தினர் அன்னபூரணியை வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.மேலும் ஒரு கோடி மதிப்புள்ள கார் 2 கோடி மதிப்பிலான வீடு வாங்கி தர வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கணவருடன் சேர்ந்து வாழ விடுவோம் என்றும் அன்னபூரணியை,ரித்தீஷின் குடும்பத்தினர் நிர்ப்பந்தித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி வரதட்சனை கொடுமை செய்கிறார்கள் என்று புகார் கொடுத்தால் அன்னபூரணி -யையும் அவருடைய பெற்றோர்களையும் உயிருடன் விடமாட்டோம் என்றும்,தங்களுக்கு மிகப்பெரிய அரசியல் பலம் இருப்பதாகவும் அன்னபூரணியை ரித்தீஷின் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர்.அவர்களின் மிரட்டலுக்கு பயந்த அன்னபூரணி கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி,
ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபா தேவிக்கு இந்த வழக்கு குறித்து புகாரை பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி அவர்கள் அன்னபூரணியின் மாமனார் மாமியார் கணவர் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக அன்னபூரணி போஸ்டர் அடித்து அவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் ஒட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

author avatar
Pavithra