காலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

Photo of author

By Madhu

காலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

Madhu

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்ட நிலையில் ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்ல துவங்கி உள்ளனர். பள்ளிக்குச் சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது ஈகை பெருநாளாம் பக்ரீத் பண்டிகை ஜூன் 6ஆம் தேதி, 7 ஆம் தேதி, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்கள் விடுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தியாவில் பிறை தெரிவதன் அடிப்படையில் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதினால் மற்ற மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை நாள் வேறுபடும் இதனை கருத்தில் கொண்டு மாநிலங்களில் விடுமுறை விடப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பக்ரீத் பண்டிகை ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுவதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்திருக்கின்றார்.

இதனால் தமிழ்நாட்டில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நான் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருப்பதினால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.