இந்து முன்னணி சார்பாக மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் இடையே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன், மத்திய இணை செயலாளர் எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்களை இந்து முன்னணி நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர்.
அதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், பல்ஹாம் தாக்குதல் பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு, குன்றம் குமரனுக்கு சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும், தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோவில்கள் அமைக்கப்பட்டது.
இந்த கோவில்களில் அந்தந்த கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முருகனின் ஆறுபடைவீடு, மாதிரி கோயில்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்தபட்ட கலை நிகழ்ச்சியில் குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.