மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

Photo of author

By Madhu

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

Madhu

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் நிலையில் கடன்கள் பயிற்சிகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக சிறுசேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ வருமானம் பெற உதவுகின்றன. கிராமப்புறங்களில் வறுமையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு சிறு கடன்கள் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் உருவாகி தருகின்றது.

வறுமையை குறைக்க உதவும் நிலையில் பெண்களுக்கு பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்கவும் உதவுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளால் மகளிர் சுய உதவி குழுக்கள் அதற்கு பல்வேறு சலுகை மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பாக திருவள்ளுவர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2,014 பெண்களுக்கு 131 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வங்கி கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகின்றது.

கடன்களை பெற்று அதனை முறையாக செலுத்தும் சுய உதவி குழுக்கள் இதற்கு தகுதி பெற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகளிர் சுய உதவி குழுவிற்கு மத்திய அரசு 1261 கோடி ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் மகளிருக்கு ட்ரோன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ட்ரோன் மற்றும் உபகரணங்களின் செலவில் 80 சதவீதம் அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை தேசிய வேளாண் உள் கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க அதிக அளவு ட்ரோன் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மகளிர் வருமானத்தை பெற வாய்ப்புள்ளது. மேலும் ட்ரோன் பயன்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுவிற்கு 15 நாட்கள் பைலட் பயிற்சி மற்றும் பத்து நாட்கள் வேளாண் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.