உக்ரைனில் தொடங்கப்பட்ட நேரடி வகுப்புகள்! கலக்கத்தில் இந்திய மாணவர்கள்!

0
224

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது இந்த நிலையில் போர் கடுமையாக நடைபெற்றதால் அங்கு இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டனர். ஆனால் தற்போது அங்கே மீண்டும் மருத்துவ கல்லூரிகள் நேரடி வகுப்புகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவிற்கு தொடர் திரும்பியிருந்த மருத்துவ மாணவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்கரையின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது அந்த போர் தற்போது வரையில் நீடித்து வருகிறது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் உச்சத்தில் இருந்தபோது கடந்த மார்ச் மாதத்தில் அங்கே மருத்துவம் படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது நடைபெற்று வருவதால் ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த மாணவர்கள் இணையதளம் மூலமாகவே படித்து வந்தார்கள்.

இதற்கு நடுவே இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ கல்லூரிகளில் தாங்கள் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உக்கரையிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர் இதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன.

ஆனாலும் வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மருத்துவ படிப்பை தொடர்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது இந்த நிலையில் மறுபடியும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் தேர்வுகள் நடத்த உள்ளதாகவும் உக்கிரன் கல்லூரிகள் அறிவித்திருக்கின்றன இது இந்தியாவைச் சார்ந்த மாணவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உக்கிரேனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தெரிவித்ததாவது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இணையதளம் மூலமாக படித்து வந்தோம் இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மறுபடியும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதாக உக்கரை மருத்துவக் கல்லூரியில் தெரிவித்துள்ளனர் அதோடு அக்டோபர் மாதத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ தகுதி தேர்வான குரோக்-1 நேரடியாக நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அங்கே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது இருந்தாலும் உட்கார்ந்தின் தலைநகர் உள்ளிட்ட நகரங்களில் அமைதி நிலவி வருவதால் நேரடி வகுப்புகளிலும் நேரடி தேர்விலும் பங்கேற்கும் ஆறு கல்லூரிகள் தெரிவிக்கின்றன இதனால் உயிரை பணயம் வைத்து மறுபடியும் சொல்வதாய் என்ற குழப்பம் எங்களுக்கு உண்டாக இருக்கிறது பெற்றோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்த வருடம் தேர்வு எழுத விட்டால் அடுத்த வருடத்தில் எழுதிக் கொள்ள முடியும் ஆனால் ஏற்கனவே வகுப்புகளை எழுந்துள்ள நிலையில் மேலும் ஒரு வருடத்தை இழக்க வேண்டுமா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleஅரசின் அதிகாரத்தை நீதிமன்றம் எப்படி கையிலெடுக்க முடியும்? மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்த அதிரடி கருத்து!
Next articleபாத்திரத்தை ஹெல்மெட்டாக அணிந்த ஒன்றரை வயது குழந்தை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here