எனக்கு யாரும் தேவையில்லை..! திருமணம் குறித்து கோவை சரளா கருத்து..!

0
234
Kovai Sarala
#image_title

Kovai Sarala: தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் தங்களுக்கென தனி இடத்தை பிடித்தது போல நடிகைகளும் அவர்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை கேட்டால் நம் நினைவுக்கு அதிகமான நடிகர்கள் வருவார்கள். ஆனால் பெண் நகைச்சுவை நடிகைகள் குறிப்பிட்ட சிலர் தான் இருப்பார்கள்.

அந்த வகையில் பெண் நகைச்சுவை நடிகைகளில் நம் நினைவுக்கு முதலில் வருவது மனோரமாவிற்கு பிறகு கோவை சரளா தான். இவர் கமலுடன் சதி லீலாவதி, நடிகர் வடிவேலுடன் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம்.

மேலும் இன்றும் அவர் பல படங்களில் ஆரம்பத்தில் எவ்வாறு நடித்தாறோ அதே போன்று தான் நடித்து வருகிறார். அவருக்கென தனி ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது 60 வயதாகும் நடிகை கோவை சரளா திருமணம் செய்துக்கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய கோவை சரளா நாம் பிறக்கும் போது தனியாக தான் பிறந்தோம். இறக்கும் போதும் தனியாக தான் இறக்கு போகிறோம். நடுவில் ஏன் ஒருவரை சார்ந்து வாழ வேண்டும் என்றும், எனக்கு சுதந்திரமாக வாழ தான் பிடித்திருக்கிறது. மேலும் திருமணம் ஆகி குழந்தைகளை பெற்றுக்கொண்டு, அந்த பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களின் பெற்றோர்களை கைவிடுகிறார்கள்.

எனவே எனக்கு யாரையும் சார்ந்து இருக்க பிடிக்கவில்லை என்றும், நான் இப்படி இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை, போர் அடித்தால் கோவிலுக்கு செல்வேன் என்றும், திருமணம் செய்துக்கொள்ளாததை பற்றி பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: அப்பா இறந்ததற்கு கூட போகல.. தவறா பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய கோவை சரளா..!