தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது!! இன்றைய நிலவரம்!!

Gold News: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்று சற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் தங்கம் விலை எந்த அளவுக்கு உயரும் என மக்கள் வேதனையில் உள்ளார்கள்.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டது. இதனால் நகை பிரியர்கள் மிக அதிக அளவில் வேதனையில் இருந்தார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57,000த்தை தாண்டி விற்பனை செய்தது. அதன் பின்னர் 19-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.58,000 என்ற நிலையையும் தாண்டி விற்பனை  செய்தது.

தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது!! இன்றைய நிலவரம்!!

மேலும் கடந்த மாதம் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இந்த நிலையில் மக்கள் இப்படி தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்றால் தங்களின் மகள், மற்றும் மகன்களுக்கு எப்படி தங்கம் வாங்குவது என வேதனையில் இருந்தார்கள். இதை போக்கும் விதமாக நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.1உயர்ந்து ரூ.103க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.