கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் செய்து வருகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பொழுது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் புதிய தமிழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தோல்வியை சந்தித்தது. 2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால் பட்டியலின வெளியேற்றம் குறித்து எந்த முடிவையும் பாஜக அறிவிக்காததால் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தேவேந்திர குல வேளாளர் வாங்கிய வங்கியை கணிசமாக வைத்துள்ளது. இந்நிலையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இந்நிலையில் 2026 தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லாததால் விஜயின் தவெக கட்சியுடன் சேர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் முன்வைக்கும் கருத்துக்களை கிருஷ்ணசாமி தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் திமுகவை வீழ்த்த விஜய் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.